Wednesday, December 21, 2011


சனி பெயர்ச்சி …
மறத்து விடாதீர்கள்
இனி மேல்
வாரத்தில்
ஆறுநாள்கள் தான்
   *********


Wednesday, December 14, 2011

முகவரியைத் தொலைத்தவனின் முகவரி


               
நமக்கு பிடித்த பாடல்களைதிரைப்படங்களை திரும்பச் சுற்றுச்செய்து (REWIND) கேட்கின்ற, பார்க்கின்ற மாதிரி வாழ்க்கையை மீண்டும் திரும்பச் சுற்ற செய்கின்ற வசதியை இயற்கை நமக்கு அளித்திருந்தால் நமது வாழ்க்கையின் இனியப் பக்கங்களை கண்டு மகிழ்ச்சியடையவும்,கோணல் பக்கங்களை மீளாய்வு செய்து திருத்தவும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நான் நினைப்பது உண்டு. மக்கள் பண்பாடு இதழ்களின் இந்த தொகுப்பை வாசிக்கையில் இந்த உணர்வு தான் மேலிடுகிறது. மனநிறைவையும்,நெகிழ்வையும் அது ஏற்படுத்திகிறது.
1990களில் பண்பாட்டுத்தளத்தில் களப்பணி ஆற்றிய மக்கள் பண்பாட்டு பேரவையினால் கொண்டு வரப்பட்ட இந்த இதழ்கள் அக்காலத்தின் கண்ணாடியாய் இருந்ததை உண முடிகின்றது. அக்காலத்தின் மைய சிக்கலான உலகமயமாக்கலையும், இந்துமத பாசிச மயமாக்கலையும் சரியான உட்செறித்துக் கொண்டு, அதை எதிர்ப்பதிலும், பதிவு செய்வதிலும் முன்னோடியாக இந்த இதழ்கள் இருந்துள்ளன.
60களின் இறுதியில் வந்தபுதிய தலைமுறை”, 70 களின் ஆரம்பத்தில் வெளிவந்த மனிதன்”, 80களில் வெளி வந்த செந்தாரகை ஆகியவைகளின் தொடர்ச்சியாகத்தான் 90 களில் வெளிவந்த மக்கள் பண்பாடு இதழைப் பார்க்க வேண்டும்! அப்பொழுதுதான் இந்த தொகுப்பின் வரலாற்றுத் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும், இன்றியமையாமையும் நம்மால் உணர முடியும். தமிழ்நாட்டு வரலாற்றில் உந்துசக்தியாக இந்த இதழ்களும்இதில் பங்களித்த படைப்பாளிகள் இருந்தனர். இன்றும் களத்தில் இருக்கின்றனர். 
எல்லா சமூக நெருக்கடிகளும், அவைகளின் வளர்ச்சிப்போக்கில் தங்களுக்கான இயக்கங்களையும், படைப்பாளிகளையும் தலைவர்களையும் வரலாற்றின் முன்சமைக்கின்றன. தனது அகமுரண்களை விமர்சன- சுயவிமர்சனங்கள் மூலம்களைந்து போராடும் மக்கள் திரளுடன் இணைந்து பெரும் இயக்கமாக மாற்றம் கொள்ளும் போது அந்த நெருக்கடிகள் முடிவுக்கு வருகின்றன.  ல்லையெனில் மீண்டும் மீண்டும் நெருக்கடிகள் தனக்கான இயக்கங்களை தொடர்ந்து வரலாற்றில் முன்கொண்டு வந்த நிறுத்திக்கொண்டு இருக்கும். சமூக முரண்களும் அதன் நெருக்கடிகளும் புரட்சிகளால் முடிவுக்கு கொண்டு வரும் வரை இந்த அலைகளின் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்.
இந்த பின்னணியில் இந்தத் தொகுப்பை புரிந்து கொண்டுப் பரிசீலிக்க வேண்டும்.
மக்கள்பண்பாடு போன்ற சிற்றிதழ்கள் பங்களிப்பை அதன் தாக்கத்தை தமிழ்நாட்டின் பெரும் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அன்றைக்கு சிறிய அளவல் இருந்தது. வரலாற்றின் தொடர்ச்சியில் அதன் பங்களிப்பு கணிசமானதாகும். சமீபத்திய இரு நிகழ்வுகள் இதற்கு சான்றாகும். தமிழ்வழிக்கல்வி, பொதுக்கல்விமுறை,  பொதுபாடத்தை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கு முன்பு 14 இயக்கங்களின் கூட்டியக்கம் திண்டிவனத்தில் ஆரம்பிக்கப்பட்டதை மக்கள்பண்பாடு பதிவு செய்துள்ளது. சிறுபொறியாக-சிறுகுழுக்களின் கோரிக்கையாக இருந்த அது பெரும் காட்டுத் தீயாக பல இயக்கங்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த பெரும் மாணவர்-மக்கள் எழுச்சி இந்த ஆண்டு நடந்ததை அவதானிக்கையில் இத்தகைய புரட்சிகர இதழ்களின் கால பொருத்தப்பாட்டை விளங்கி கொள்ள முடிகிறது.
              ராஜீவ் கொலையைப் பின்புலமாக்கி கொடூர அடக்கு முறைகளை அன்றைய ஜெயா அரசு மக்கள் மீது திணித்தது. இம்மொன்றால் சிறை, போராடினால் தடா என்பது எழுதாத சட்டமாகி இருந்தது. சித்ரவதைச் செய்யப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலங்கள், கறுப்புச் சட்டமான தடாவின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட நீதிமன்ற வழக்கு விசராணை,  அரசியல்ரீதியில் பழிவாங்கப் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளில் அனைவருக்கும் தூக்குத் தண்டனையைச் சர்வசாதாரணமாக இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. இந்த ஒடுக்கமுறைக்கு எதிராக பல்வேறு சிறிய இயக்கங்கள் முதலில் களம் இறங்கி. மக்கள் பண்பாடு இதழும் தனது பங்களிப்புச் செய்ததை இத்தொகுப்பில் காணலாம்.
மக்கள் பண்பாட்டுப் பேரவையால் ஒருங்கிணைக்கப்பட்ட புரட்சி பாடகர் கத்தார் பங்கேற்ற  “ மரணதண்டனைக்கு  எதிரான கலைநிகழ்ச்சிசென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. மக்களின் எதிர்ப்பால் அனைவருக்கும் தூக்குத் தண்டனை என்பது ரத்து செய்யப்பட்டது. நான்கு பேருக்கும் மட்டும் தூக்குதண்டனை என உச்சநீதிமன்றம் மக்கள் முன்பு அடிபணிந்தது! தற்போது இலங்கை அரசைப் போர் குற்றவாளியாக்க உலகமெங்கும் நடைபெறும் மக்கள் இயக்கத்தை திசைதிருப்ப மூன்றுப் பேருக்குத் தூக்கு என்று ஆளும் காங்கிரஸ் அரசு நாள் குறித்தது. இதனால் மரணதண்டனைக்கு எதிரான இயக்கம் தமிழ்நாட்டில் பெரும் எழுச்சிக் கொண்டதால் தற்காலிகமாக அது நிறுத்தி வைக்கப்பட்டது. ராஜீவ் கொலைக்கு பின்னர் காட்டு தர்பார் ஆட்சி செய்த ஜெயா கும்பல் இன்று தூக்குதண்டனையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் இயற்றியுள்ளது. இதற்கு காரணம்  மனித உரிமைக்கு ஆதரவான, அடக்குமுறைக்கு எதிரான மக்கள் திரள் இயக்கம்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதில் சிற்றிதழ்களின் பங்களிப்பை மக்கள் பண்பாடு  இதழின் காலப் பொருத்தபாட்டை இந்த இரு ம்பவங்களின் பின்னணியில் எளிதாக நம்மால் விளங்கிக்  கொள்ள முடியும்.

தாராளமயக் கொள்ளையால் தாராளமயமாக்கபட்ட ஆபாச சீரழிவு பண்பாடு எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும் எனும் நுகர்வு வெறி, ஆங்கில மோகம், ஆதிக்கச்சாதி வெறி இன்றும் பல சமூகத்தைப்பற்றி எரியும் பிரச்சனைகளைப் பற்றி
பதிவுகளை தலையங்கமாக, கட்டுரைகளாக, கதை, கவிதைகளாக இவ்விதழ்களில் பதிவாகி உள்ளன. போராட்டகளத்தில் நிற்கும் செயல் மறவர்களுக்கும், மக்களுக்கும் இடையில் ஒருமித்தக் கருத்தைக் கொண்டு வரவும், எதிரிக்கு ஏதிராக ஒருமித்துச் செறிவுடன் இணைந்து போராடவும் இவைகள் இன்றும் பொருத்தப்பாடு உடையவையாக விளங்குகின்றன. இறுக்கமான நிலவுடைமைக்கும், கொடூர பாசிச ஒடுக்கு முறைக்கும் இடையில் ஜனநாயக வெளியை இப்படைப்புகள் திறந்து விடுகின்றன.
கிருஷ்டோபர் காடுவேல்,  சரபண்டராஜ், கென்சரா விவா, கோ.கேசவன், குமரேசன் போன்ற பண்பாட்டுப் போராளிகளின் வாழ்க்கைப் பதிவுகள் எனக்கு இதில் முக்கியமானதாகப் படுகிறது. அவர்களின் நிலவுடைமை ஏகாதிபத்திய எதிர்ப்பு
படைப்புகள் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையே ஒருபடைப்பாக பாடமாக நம்முள் ஒளிர்கிறதுவாழ்வியல் கண்ணோட்டத்தை செழுமைப்படுகின்றது. மக்கள் பண்பாடுதொடர்ந்து வந்திருந்தால் பண்பாட்டுப் போராளிகள் வரலாறு தனித்தொகுப்பாக வெளிவந்திருக்கும் என்ற ஏக்கம் நெஞ்சில் கரையாமல் நிற்கிறது.
 வாய்மொழி எதிர்ப்பிலக்கியம் சில பதிவும் இதில் உள்ளன. இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டியவைகள், கள ஆய்வுகளை மேற் கொள்ள வேண்டிய அவசியத்தை இன்னும் நிறையவே உள்ளன என அவை சொல்லாமல் சொல்கின்றன.சுரண்டலை சகித்துக் கொண்டு மக்கள் திரள் மொக்கையாக இருந்ததில்லை. தங்கள் எதிர்ப்புகளை கலைநயத்துடன் எதிர்வினையாற்றி உள்ளதை இப்பொழுது பதிவாக்காவிடில் எப்பொழுதும் பதிவு செய்ய முடியாது.
பதினைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தங்கள் படைப்புகளை இந்த இதழ்களில் பங்களித்தவர்கள் இன்று குறிப்பிடத் தகுந்த ஆளுமைகளாக வளர்ந்துள்ளனர். நாடக அரங்கில் பணியாற்றும் போராசிரியர் பார்த்திபராஜா, “சோளகர் தொட்டி”  நாவலின் ஆசிரியர் பாலமுருகன்,  “ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம்”  மொழியாக்கம் செய்த முருகவேள், யாழினி முனுசாமி,  பாலன்,  கிருஷ்ணன், “ஒடியன்எனும் தலைப்பில் இருளர் வாய்மொழி கவிதைகளைத் தொகுப்பாக்கிய லட்சுமணன்.....என்று இப்பட்டியல் நீள்வது இத்தொகுப்பை அர்த்தமுள்ளதாக்குவதாக விளங்கிற்று.
காணாமல் போன தன் குழந்தையை ஒரு சந்தர்ப்பத்தில் இந்த குழந்தையைப்பெற்ற தாய் சந்தித்தால் எவ்வாறு மன எழுச்சியும், மகிழ்ச்சியும் அடைவர்களோ அந்த உணர்வுக்கு இத்தொகுப்பை வாசிக்கையில் ஆட்கொள்ளப்பட்டேன். இதில் உள்ள ஒவ்வொரு படைப்பும் ஏதோவொரு விதத்தில் என்னைக் கடந்து சென்றுள்ளதை உணரமுடிந்தது! இருப்பினும் இப்படைப்புகள் அனைத்தும் மார்க்சிய-லெனினிய-மாவோவியத்தை வழிகாட்டுதலாக கொண்டு மக்கள் பண்பாட்டுப் பேரவையின் அதன் ஆசிரியர் குழுவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. அப்படைப்புகளை வாசிக்கையில் அந்த வசந்த காலம், வாழ்வை அர்த்தமுடையதாக்கிய நினைவுகள் புதிய தெம்பை எனக்கு மீண்டும் அளிக்கின்றன.
இவ்விதழில் பதிவாகி உள்ள எனது சில கட்டுரைகள் எனக்கே பிரமிப்பை உண்டு பண்ணின். இன்று என்னால் அப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை? அதற்கு நீண்ட களப்பணியும், போராடும் மக்களிடம் நெருக்கமும், கூட்டுச் சிந்தனையும் முன்நிபந்தனைகள் என்பது எனக்கு விளங்காமல் இல்லை..!
இத்தொகுப்பை வாசிக்கையில் சில விமர்சனங்களும் எழுகின்றன. சில படைப்புகளை இன்னும் செழுமையாக தந்திருக்க முடியும் நூல்கள் பற்றிய விமர்சனமோ, அறிமுகமோ இவ்விதழ்களில் இல்லை. விரிந்து பரந்தப் பல படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெற்று இருக்கவேண்டும். இதழ்களை முறையான கால இடைவெளியில் கொண்டு வரவில்லை. இன்னும் கடின உழைப்பும், ஒத்துழைப்பும் நல்கியிருந்தால் எளிதாக இவைகளை கடந்து வந்திருக்க முடியும்.
இந்த தொகுப்பு பற்றி தோழர் ஒருவரிடம் உரையாடிய பொழுது மக்கள் பண்பாடு இதழ் தொடர்ந்து வெளிவந்திருந்தால் தமிழ்நாட்டு இலக்கிய உலகில் முக்கிய சக்தியாக உருவாகி இருக்கும். நூற்றுக்கணகாணக்கான சிறந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள் உருவாகி இருப்பார்கள். மக்கள் போராட்டங்களுக்கு, இயக்கங்களுக்கு புதிய உற்சாகத்தையும், தெம்பையும் தந்திருக்க வேண்டிய அவர்கள் காலவெள்ளத்தில் கரைந்து காணாமல் சீரழிந்து போய் விட்டனர். வழிகாட்டிய தோழர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று விமர்சனம் வைத்தார்.
எனக்கு இந்த விமர்சனம் பொருந்தும் என்பதால் நான் மௌனமாகி போனேன்!
இத் தொகுப்பினை பதிப்பித்தத் தோழர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
  “மக்கள் பண்பாடு      இதழ்களின்     தொகுப்பு:
 மணிக்கோ. பன்னீர் செல்வம்.   விலை: ரூ.250/-
வெளியீடு: இளங்குருத்து புத்தகச் சந்திப்பு, மதுரை.
அலைபேசி; 94888 60685 மின்னஞ்சல்: ilanguruthu2011@gmail.com







Sunday, December 4, 2011

டிசமப்ர்-6 வருகையில் இந்த கவிதை வரிகள் கேள்விகள் நெஞ்சை உறுத்தும்.


       ஒரு இந்திய முஸ்லீமின் பிரார்த்தனை
யா அல்லாஹ
நிராயுதபாணியாய்  கையேந்துகிறோம்
இவர்களின் கேள்விகளுக்கு
பதிலளீக்கும் திராணியற்றவர்களாய்...

கடற்கரை வெளிகளில்
புற்கள் தேங்கிய பிரதேசங்களில்,
வீதிகளின் கட்டாந்தரையில்
பெருநாள் தொமுகைக்காகக் கூடுகிறோம்.

எங்கள் தாய்தேசத்தின் செழிப்புக்காக
உன்னிடம் இறைஞ்சுகின்ற வேளை
தங்களுக்குள் இரகசியமாய் பேசிக்கொள்வது
காதில் விழுகிறது.
இதோ வெளிநாட்டுக்காரர்கள் கூடி
சதி செய்கிறார்கள் என்று
தங்கள் வீடுகளையும்
பயணிக்கின்ற பாலங்களையும்
பாதுகாக்க ஒடுகிறார்கள்.
வேகமாய்.....

தேசம் எரிகிறதுதான்
உற்று நோக்குங்கள்
எங்கள் கைகளில் பிடில் இல்லை

எங்கள் இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்களுக்காக
கரவொலி எழுப்புகிற போது,
ஏன் செய்றகைத்தனமாய் நடந்து கொள்கிறாய்’?
என்று தொலைக்காட்சியிலிருந்து ஒரு
அசரீரி கேட்கிறது.

எங்களுக்கும், அந்த உளவு நிறுவனத்துக்கும்
தொடர்பிருப்பதாக உரக்கக் கத்துகிற ஒசை
அந்த மலைகளில் மோதி எதிரொலிக்கிறது
மறுபடி! மறுபடி!

சிக்கிமுக்கிக் கல்லாய்
உரசிய கேள்விகளில்,
நீ... நீ பதில் சொல்இறைவா!

எது எங்கள் தேசம்?
எது எங்கள் கலாச்சாரம்?
எது எங்கள் தாய்மொழி?.


                                                                     இ.சும்சுதீன்.

Monday, November 21, 2011

கவிதை


பொம்மைகளின் அரசியல்

குட்டி பாப்பாவுக்கு பொம்மைங்கன்னா
கொள்ளை ஆசை
பீடிகட்டை இரண்டை  கொறைச்சாவது
மாதம் பொம்மை ஒன்னு 


பாப்பா தட்ற தட்டுல தாஞ்சாவூர் ராஜா
கால்ல விழுந்து விழுந்து கும்பிடும்
கைக் கொட்டி கெக்கலிச்சு சிரிக்கும்

ஊதி பெருத்து கொழுத்த பலூன்கள்
கலர் கலராய் யானையில தொங்கும்
பாப்பா கூர்நகம் வெடித்து சிதறடிக்கும்
அதிர்ச்சியில் அழகாய் கண்கள் சிரிக்கும்

திருவிழா தெருவெல்லாம் பொம்மைகடைகள்
சுற்றி சுற்றி உற்சாகமாய் காண்பித்தேன்
கிளுகிளுப்பை, பீப்பீ, பந்து. சொப்பு…
பொம்மைங்கன்னா மகிழ்ச்சின்னு நினைப்பு 


பாப்பாவுக்கு என்னா பொம்மை வேணும்
காந்திகுரங்கு பொம்மை காட்டியது

நாலு தலைமுறைகளை காயடித்து
நாட்டை கெடுத்து குட்டிச் சுவராக்கிய
நீதிஅறம் போதிக்கிற அரசியல் பொம்மை

பொட்டை கண்ணாய் போயிடு
செவிட்டு முண்டமாய் கிட
ஊம கோட்டானாய் இரு
பாப்பாவை சாபம் இட்டது


ஆயாவிடம் விளக்கி  சொன்னதற்கு
கட்டையில் போறவன் நாசமாய்  போக
சத்திய ஆவேசம் வந்து கத்தினாள்

அப்புகுட்டி பாப்பா அர்த்ததுடன் சிரித்தது .    

Monday, November 14, 2011

கவிதை


நிலவுதட்டில் நட்சத்திரங்களை உண்ணும்
வானவில்லில் கோவணம் உடுத்தும்
பறக்கும் யானையில் பவனி வரும்

கருவறையில் கக்கா போகும்
மசூதிக்குள் முத்தங்கள் பொழியும்
பைபிள்களில் பந்துகள் ஆடும்

தாயின் தாலிகொடி அறுக்கும்
தந்தையை செருப்பால் அடிக்கும்
தமயனிடம் சண்டைகள் செய்யும்


சாதி மதம் இனம் மொழி
தேசம் நாடு போர் வர்க்கம்
தெரியாத  குழந்தைகள் உலகை
வாழ்த்திவோம் கொண்டாடுவோம்


'குழந்தைகள் தினம்

கனவு விளையாட்டு 
கல்வி மகிழ்ச்சி
குறும்பு ஆசைகள்
சுதந்திரம் சுயமரியாதை
உணவு உறைவிடம்

எங்களிடம் பறித்த
நீங்கள் கொண்டாடுங்கள்
எங்களின் நினைவாக
கொண்டாடுங்கள்

Monday, November 7, 2011


முன்ளாள் குடியரசு தலைவருக்கு…

அத்வானி கனவு
அப்துல்லா கனவு
வேறானவை

ஆண்டை கனவு
அடிமை கனவு
வேறானவை

சங்கராச்சாரி கனவு
நந்தன் கனவு
வேறானவை

இராசபக்ச கனவு
முள்ளிவாய்கால் கனவு
வேறானவை

இந்திய இராணுவம் கனவு
சயோராம் சர்மிளா கனவு
வேறானவை

பாம்பின் கனவு
மீனின் கனவு
வேறானவை

வல்லரசு கனவு
மக்கள் கனவு
வேறானவை

உங்கள் தேசம்தான்..
எங்கள் கனவுகள் உங்களுடையதல்ல





சிறுகதை - ஆயுத பூசை மகிமை


ஆயுத பூசை மகிமை
                                                              

மக்கள் நண்பனான காவல்துறைக்கு ஆசை இருக்கதா என்ன? தெரு ஒரக் குட்டிகடைகள், சிறிய கடைகள், பெரிய ஸ்டோர்கள், மெகா மார்ட்கள், தொழிற்சாலைகள், வீடுகள், கோயில்கள், அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருந்தன. நம்ப போலிஸ்ஸ்டேன் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒரே ஒரு வேறுபாடு இருந்தது. மற்றவர்கள் அனைவரும் அவரவர் செலவில் ஆயுத பூசை கொண்டாடினர். மக்களின் நண்பர்கள் மக்கள் பணத்தில் விழா எடுத்து மகிழ்ந்தனர். சுருங்க கூறின் மற்றவர்கள் செலவில் மஞ்சா குளித்தனர்.

ஒட்டு மொத்த போலிஸ் ஸ்டேசனே வசூல் வேட்டையில் இறங்குவது பற்றி ஒன்று கூடி சனநாயக முறையில் முடிவடுத்தது. அவரவர்களுக்கு உரிய சாலைகள், தெருக்கள் காவலர்களின் கிரேடுகளுக்கு தகுந்த மாதிரி பிரிக்கப்பட்டன. பெரிய பெரிய ஸ்டேர்கள் இருக்கும் சாலை இன்ஸ்பெக்டருக்கு என்றால், புதியதாக சேர்ந்த கான்ஸ்டபிளுக்கு தெருவோர கடைகள் அதிகமுள்ள தெரு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நல்ல வசூல் பண்ணணும். ஒரு  கடைகண்ணிய விடாதீங்க. யாரு அதிகம் வசூல் பண்றாங்களோ அவங்களுக்க வசூல்ராஜா பட்டம் அளிக்கப்பட்டு, பெரியய்யா கையாலே வசூல் போனசு  கூடுதலாக வழங்கப்படும்

இன்ஸ்பெக்டர் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அனைவரும் ஆராவராம்  செய்து வரவேற்றனர். வசூல் வேட்டையில் பங்கும் கூடவே போனசும் கிடைக்கும் என்றால் சும்மாவா?

நம்ம ஏட்டு ஐய்யருக்கு மட்டும் சிறிய தெருதான் ஒதுக்கப்பட்டது நெய் மணக்கும் நெய்காரத்தெரு. கூடுதல் பொறுப்பாக அவருக்கு காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தல், பூசை, புனஸ்காரப் பணிகள் ஒதுக்கப்பட்டது. ஐய்யர் ஏட்டிற்கு தனது குலத்தொழிலையே தனக்கு ஒதுக்கீடு செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

போலிஸ் ஸ்டேசன் முழுவதையும் தூய்மைபடுத்தும் வேலைதொடங்கியது. இலேசில் முடியும் காரிமாக அது தெரியலில்லை. பல்வேறு வழக்குகளில் கைப்பறறி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் மோட்டார்கள்,  பைக்குகள், கார்கள், லாரி அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவைகள் துருப்பிடித்து உளுத்து கொட்டி, மண்ணோடு மண்ணாக மக்கி இரும்பு ஆக்சைடாக  மாறும் அதிசயத்தை காண்பதற்கான இராசயான கண்காட்சி அரங்கமாக விளங்கின.

இதையெல்லாம் ஐய்யர் ஏட்டு சுத்தப்படுத்தினார். அவர் தானே இந்த வேலைகளை செய்யும் இளிச்ச வாயன் இல்லை. தினமும் சந்தேககேசில் (வழக்கு என்ற தமிழ் சொல் சந்தேககேசு’ என்பதன் முழு பரிணாம அர்த்தத்தை விளக்க பயன்படவில்லை) பிடித்து அல்லது  இழுத்து வரப்பட்டவர்களுக்கு தான் போலிஸ் ஸ்டேசனை தூய்மையாக்கும் புண்ணியம் கிடைத்தது. கான்ஸ்டபிளர் முதல் இன்ஸ்பெக்டர் வரை நம்ம ஆளுதான் என்று லோக்கலில் மார்தட்டும் சில அல்லக்கைகளுக்கும்   இந்த புண்ணியம் கொஞ்சம் போய் சேர்ந்தது!

ஒராண்டாக மட்டி கிடந்த புற்கள், குப்பைகள் அகற்றப்பட்டு ஒட்டடைகள் அடிக்கப்பட்டது. ஆசிடும், பினாயிலும் ஊற்றி தரைமுழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. ஆனால், லாக்கப்பில் எவ்வளவு ஆசிட், பினாயில் ஊற்றினாலும் அதில் அப்பிக்கிடந்த அழுக்கும், சிதைக்கப்பட்ட மானுடத்தின் நாற்றமும் மறையவில்லை. ஐய்யர் ஏட்டு இந்த பணிகளுக்கு தலைமை ஏற்று திறமையை நிருபித்தார்.

ஆயுத பூசை நெருங்க நெருங்க வசூல் வேட்டை தீவிரம் அடைந்தது. இன்பெக்டர் தங்க ஆபரண விற்பனையாளர் சங்கத்தின் செயலாளரான மார்வாடி சேட் பங்களாவிற்கு வசூலுக்கு சென்றார். சேட் தடபுடலாக வரவேற்றார். இன்ஸ் வந்திருக்கும் மர்மத்தை சேட் புரிந்து வைத்து இருந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நகை கடையில் நடைபெற்ற கொள்ளை இன்னும் துப்பு துலங்காமல் இருப்பதை வருத்தத்துடன்  பகிர்ந்து கொண்டார்.

ஒரு வாரத்துக்கு முன்தால் பெரிய்ய கிளப் பார்ட்டியில் பெரிய்யாக்களை கண்டு கிட்டோம். உங்களுக்கும்,  ஸ்டேசனுக்கும் வேண்டியது தந்திடுரோம்

சேட் சொன்னதை இன்ஸ்பெக்டர் புரிந்து கொண்டார். பதவி ரேங்கிற்கு தகுந்த மாதிரி சவன் அன்பளிப்புகள் படிப்படியாக ஏறி இறங்கி வந்தன.

பதியதாக பணியில் சேர்ந்த கான்ஸ்டபிள் தொப்பைக்கானுக்கு இந்த வசூல் வேட்டை தர்மச்சங்கடத்தை தந்தது. கடமை, நேர்மை தேசப்பற்று போன்ற சிலதுகளுக்காவும், அரசங்க உத்யோக ஆசையிலும் எப்படியோ அடித்து பிடித்து அவன் கான்ஸ்டபிளாக சேர்ந்து விட்டான். அவனின் கனவுகளுக்கு விழுந்த முதல் அடி
ஸ்டேசனில் சேர்ந்த அன்று இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு எடுபிடி வேலைக்கு அனுப்பட்ட பொழுது நேர்ந்தது.   

ரோந்து போக வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் முதல் மாதச் சம்பளத்தில் புதியதாக மிதிவண்டி ஒன்றை தொப்பைக்கான் வாங்கினான். ஐய்யர் ஏட்டு மிதிவண்டியை பார்த்து விட்டு சொன்ன வார்த்தை…..

சைக்கிள் வாங்கினியே..  அதில் பெட்டி வாங்கி ஜாயிட் பண்ணவேண்டியதானே. அந்த பெட்டிதான் போலிஸ்காரன்னு சொல்லுவதற்கான அடையாளம்....

கடைசி வார்த்தையை அழுத்திச் சொன்னார். அதன் அர்த்தம் புரிந்ததும் , சுயமரியாதை உள்ள அவன் மிதிவண்டியை சில நாட்கள் கொண்டு செல்லவில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்கு அந்த வைராக்கியம் நீடிக்கவில்லை என்பதை இங்கு பதிவு செய்வது அவசியமாகும்.

புதியதாக சேர்ந்த கான்ஸ்டபிள்கள் இருவருக்கும் தெருவோர கடைகள் நிறைந்த சாலை ஓதுக்கப்பட்டது. அவர்கள் சரியாக  வசூலிக்கன்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு ஐய்யர் ஏட்டிற்கும் ஒப்படைக்கப்பட்டது.

 வெள்ளை வேன் வசூல் வேட்டைக்கு கிளம்பியது. ரோந்து போனது மாதிரியும் இருக்கும், வசூலித்தது மாதிரி இருக்கும் என்று ஒரே கல்லில் இருமாங்காய் அடித்தார் ஏட்டு. இந்த வெள்ளை வேன் வசூலினால் தொப்பைக்கான் தனது தன்மானத்திற்கு இழுக்குவந்தாக நினைத்து மிகமிக வருந்தினான்.. அரசு வேலை கிடைப்பது குதிரை கொம்பு, அதுவும் இடஒதுக்கீடு இருந்ததானல் இவனுக்கு கிடைத்தது என்பது தான் உண்மை.  வேறு வழியின்றி காலப்போக்கில் சகித்து கொண்டான். நாருடன் சேர்ந்த பூவும் நாற்றம் அடித்தது.

பத்து பதினைந்து என்று கொடுக்கிறதை வாங்க இது மாதமாதம் வசூலிப்பது கிடையாது. ஆயுத பூசை வசூல்....... கணிசமாக கேட்டு வாங்கனும். கடைக்கு  நூறாவது வசூலிக்கனும்

இரு  கான்ஸ்டபிளுக்கு வசூல் வேட்டை நடந்துவது பற்றி ஐய்யர் ஏட்டு விரிவாக வகுப்பு எடுத்தார். ஆயுத பூசைக்கு தெருஒரத்தில் ஏரளாமான கடைகள் முளைத்து கிடந்தன. பொறிகடைகள், பூசணிக்காய்-தோரணம் கடை, வாழைக்கன்றுகள் கடை என்று வித விதமாக பழைய தெருவோர கடைகளுடன் புதிய கடைகளும் சேர்ந்து கொண்டதால் ஏட்டு வசூல் கொட்டும் என மிகவும் உற்சாகமானார். நூறு ரூபாய் கொடுக்காதவர்களை கடையை காலி பண்ண சொல்லி கான்ஸ்டபிள்கள் மிரட்டினர். இப்படி மிரட்டி மிரட்டியே  மகா வசூல் செய்தனர். யாராவது ஏடா கூடாமாக தோணி மாறி பேசினால் லட்டியால் லேசாக ஆளையோ, கடையில் இருந்த பொருளையோ தட்டி தங்கள் இறையாண்மையை நிரூபித்தனர். பின்னால் சிலர்   புலம்பினாலும் சிலர் உரக்க திட்டினாலும் தைக் கண்டு கொள்ளாமல் காரியத்தில் கண்ணாக இருக்கும் படி கீதா உபதேசம் செய்தார் ஐய்யர்.


புதியாக  அந்த தெருவின் ஒரத்தில் தார்பாய் தடுப்பில் இட்லி கடை ஒன்று முளைத்து இருந்தது. .அங்கு இளைஞன் ஒருவன் சுறு சுறுப்பாக இட்லி தோசை வாடிக்கையாளர்களுக்கு தந்து கொண்டிருநதான்.

தொப்பைக்கான் போலிஸ் உடையில் போய் நின்றதும், குறிப்பால் உணர்ந்துகொண்டு ஐம்பது ரூபாய்  பணிவுடன் கொடுத்தான்.

இன்னும் அம்பது எடுடா

சார்ர்.. இப்பதான் கடைய திறத்தோம்
அந்த இளைஞன் இழுத்தான்.

”நடைபாதையில் கடையை போட்டுட்டு எதிர்த்தா பேசற நாதாரி”

லட்டியில் லேசாக தொப்பைக்கான் அந்த இளைஞனைத் தட்டினான்.

ஐய்யோ.. அம்ம்மா..”

 அவன் லோசக முனகினான். தோசை சுடுவதில் மும்முரமாக இருந்த அவன் அம்மா திரும்பினாள். தாய் கோழி தனது குஞ்சை கொத்த வரும் கழுகிடம் இருந்து காப்பாற்ற செயல்படும் தார்மீக கோபம் ஒருகணம் அந்த தாயிடம் தோன்றி  இயலாமையால் கரைந்தது.

எதிரில்  கையேந்திக் கொண்டிருந்த தொப்பைக்கானை பார்த்தாள். அந்த வயதான தாயின் சுருக்கம் விழுந்த  கண்களை நேருக்க நேர் அந்த கண்கள் சந்தித். தெறிந்த பரிவின் தீட்சம் அவனை நிலைகுலைய வைத்தது.

அவன் நின்ற அன்னை பூமி வெடித்து அவனை விழுங்கியது. அவன் தலை சிறுத்து இதயதிற்குள் ஒடி ஒளிந்து கொள்ள இடம் தேடியது. தான் பிறந்து வளர்ந்து இப்படி கேவலமான மனிதனாக இருப்பதற்கு, இல்லாமல் செத்தொழிந்து இருக்கலாம் என்று அவன் நினைத்தான்…….

பெல்லாவை காட்டி கொண்டு அலுமனியத்தட்டை தூக்கிக் கொண்டு அந்த கிராமத்தின் தெரு முளையில் ஆப்பக்கார க்காவை சுற்றியிருந்த கூட்டத்தை விலக்கி அந்த குழந்தை எட்டி பார்த்தது. தொப்பைக்கான் குழந்தையாய் இருக்கும் பொழுதே அவன் அப்பா இறந்து விட்டதால் அவனது அம்மாதான் அவனை காப்பாற்றினார். கூலி வேலைக்கு கழனி காட்டுக்கு போனால்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற  நிலைமை. வறுமை தாண்டவமாடியதால், குச்சிக்கு கை கால்கள் முளைந்த நேஞ்சான் சோகை குழந்தையாக அவன் இருந்தான். வேலைக்கு போகும் பொழுது பழைய கஞ்சியை அல்லது கூழை சிறுவனுக்கு தரும் படி உறவினரிடம் சொல்லி விட்டு அவன் அம்மா செல்வாள்.

தொப்பைக்கானின் அகோரப் பசிக்கு அது போதவில்லை. எல்லாரும் தட்டையும் கிண்ணத்தையும் எடுத்து கொண்டு போவதைப் பார்த்து, இவனும் தட்டை எடுத்துக்கொண்டு போய் ஆப்பக்கார அக்காவிடம் தட்டை நீட்டுவான். வர்கள் காசு கொண்டு செல்வது இவனுக்கு தெரியாது. ஒருகணம் தலையை நிமிர்த்தி காசு எங்கே என்பாள்.

பீளை தள்ளும் இவன் விழிகளுக்கு அதன் அர்த்தம் புரியாது! அவள் சிரிந்து கொண்டு ஆப்பம் தந்து அனுப்புவாள். இது ஒரு நாள் அல்ல ப நாள்கள் நடந்தது. வட்டமாக பளபளப்பான வெள்ளைகருவுடன் மின்னும் மஞ்சள் கரு முட்டைதோசை வேண்டும் ன்று இவன் ஒருநாள் அடம் பிடித்தான். முட்டை எடுத்து தட்டி உடைத்து ஊற்றியதும் அதன் மஞ்சள்கரு அப்படியும் இப்படியும் அலைவதை ஆச்சிரியத்துடன் அந்த குழந்தைப் பார்த்தது. விதவையான ஆப்பகார அக்காவிற்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. இதில் வரும் செற்ப வருமானத்தை வைத்துதான் அவள் குடும்பம் தள்ள வேண்டும்.

வீட்டில் சும்மா உட்காரமுடியவில்லையா”

தொப்பைகான் அம்மா அவன் முதுகில் இரண்டு இழுப்பு இழுத்ததில், அவன் அலறிய அலறல் அந்த ஊரே கேட்டது.

”சும்மா நித்துடி……… குழந்தைக்கு இன்னா தெரியும் அத போய் இப்படி அடிக்கிறஎன்று ஆப்பகார அக்கா திட்டினாள்

அதன் பிறகும் அந்த சிறுவன் காசு இல்லாமல் வெறும் தட்டுடன் வருவதும் நிற்கவில்லை. அந்த தாய் தினமும் அவனுக்கு முட்டை தோசை,  இட்லியை அன்புடன் தருவது நிற்கவில்லை. நோஞ்சான அவன் புஷ்டியாகும் வரை இது தொடர்ந்தது

இன்று கட்டுமஸ்தான கட்டுடலுடன் நின்றாலும், ஒரு கணம்  தொப்பைக்கான்  நிலை குலைந்து தள்ளாடினான். இந்த உடல்வாகுக்கு அடிஉரம் ஈட்ட அந்த தாயிக்கு, அவனை அடையாளம் தெரியவில்லை. ஊளை மூக்குடன் சோகையில் துருகிய வயிருடன் உடைய சிறுவன் இப்படி வாட்ட சாட்டமாய் காக்கி உடையில் வளர்ந்திருப்பதை அவளால் அறிந்து கொள்ள இயலவில்லை! மனிதனை விஞ்சி காக்கிசட்டை அதிகாரமே கண்ணில் துருத்திக் கொண்டு இருந்தது.

அவளது வாழ்க்கை கிராமத்து ஆப்பக்கார கடையில் இருந்து  நகரபுற  நாஸ்தா கடைக்கு முன்னேற்றம் கண்டுதான் மிச்சம்.  
ஆப்பமும், முட்டைதோசையும் தின்ற அந்த சோகை சிறுவன் வளர்ந்து கான்ஸ்டபிளாக லட்டியுடன் லஞ்சம் கேட்டு நிற்கிறான்! அதிகார பிச்சை!!
என்ன கேவலமான தொழில் என்று மனம் குமைந்தான்.  கையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டை அந்த இளைஞன் கையில் திணித்து விட்டு, தலைகுனிந்தவாறு  அந்த இடத்தை விட்டு நடையை கட்டினான். இன்னும கொஞ்சம் நேரம் நின்றால் நெஞ்சு வெடித்து அழுகை பீறிடலாம்

 இப்பவும் ஒரு குட்டி பெண் கிண்ணத்துடன் கையில் காசில்லாமல் ஆப்பக்கார அம்மாவிடம் சென்றுக் கொண்டு இருந்தை அவன் கண்டான்..

இப்படியாக சில நெருடல்கள் இருந்தாலும் கூட ஆயுத பூசை வசூல் அடை மழையாய் அந்த போலிஸ் ஸ்டேசனில் கொட்டி தீர்த்தது!

ஐய்யர் ஏட்டு அதிகாலையில் எழுது சுத்தபத்தத்துடன் ஆயுத பூசை புணஸ்கார கடமைகளை வீட்டில் முடித்து கிளம்பினார். இன்று ஸ்டேசனில் அவருக்கு நிறைய வேலைகள் காத்திருந்தது. ஒருபக்கம் பூசைக்கான வேலைகள் என்றால் மறுபுறம் அவரவரர் வசூல் செய்ததை வாங்கி கணக்கு வைக்க வேண்டும்.  கொஞ்சம் அசந்தால் ஒவ்வொருவரும் மற்றவர்களும் பட்டை நாமம் போட்டு விடுவார்கள். ஒவ்வொருத்தரை பத்தி யோக்கியதையும் ஒவ்வொருத்தருக்கும் அத்துபடி.!

அப்படி இருந்தும் ஒவ்வொருத்தரும் அவரவர் வசூலில் முடிந்தளவு அமுக்கி விட்டது  ஊரறிந்த உலகறிந்த இரகசியம்.

பொறி,  பழம், பூவிலிருந்து….. பணம் வரை அவரவர் பதவிகேற்ப பங்கு பிரிக்கப்பட்டது. காலம் காலமாக நடைபெறும் தொழில் என்பதலால் எந்த சிக்கலும் வரவில்லை.  இன்ஸ்பெக்டர் தலைமையில் சுமுகமாக பங்குகள் பிரிக்கப்பட்டது.

மாலை ஆறுமணிக்கு ஆயுத பூசை ஆரம்பித்ததுலட்சுமி, சரஸ்வதி, பார்வதி, பிள்ளையார், சிவன் என எல்லா கடவுள்களும் வரிசையாக படங்களில் தொங்கிக் கொண்டு புன்முறுவல் பூத்தவண்ணம் இருந்தனர்.

பூசணிகாயெல்லாம் ஒசியில் ஒடைச்ச சாமி குத்தம்.. மூணு பூசணிக்கா வாங்கி யாந்திடு

ஐம்பது ரூபாய் நோட்டை தொப்பைகானின் ஐய்யர் தந்தார். ஐம்பது ரூபாய்க்கு எவன் மூணு பூசணிகாய்கள் தருகிறான் என்று அவனுக்கு விளங்கவில்லை. ஒரு பூசணிக் காய் ஐம்பது ரூபாய் என்று சொன்ன கடைகாரனிடம் மூன்று பூசணிகாய்களை எடுத்து கொண்டு ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டு ஐலாசிரிப்பை உதிர்த்து விட்டு தொப்பைக்கான் நடையைக் கட்டினான்!

வாழை கன்றுகள், வாழை மரங்கள், தென்னைகுருத்து தோரணம், மாவிலை தோரணம்  என்று போலிஸ் ஸ்டேசனுக்கு புதிய கலை பொலிவு வந்து விட்டது.

உயர்ரக சந்தனத்தை குழைத்து கரைத்து ஸ்டேசன் முழுவதும் ஐய்யர் ஏட்டு பளிச்பளிச்சென தெளித்தார். ஸ்டேசன் வாசனை போய் சந்தன வாசனை கமழ்ந்தது. பெரிய பெரிய வாழையிலைகளில் பொரிகடலை, ஆப்பிள், பேரிக்காய் வாழைப்பழம் என  அனைத்து ஐட்டங்களும் மலை போல் குவிக்கப்பட்டு இருந்தது. வேட்டை வசூலின் ஈடுபட்ட போலிஸ் ஸ்டேசனின் உழைப்பு அதில் தெரிந்தது.

ஒயர்லெஸ் மைக் அலறியது. ஆனால்,  அது என்ன பேசுகிறது என்று தான் யாருக்கும் விளங்கவில்லை. ஒயர்லெஸ் கருவி பழுதாகி விட்டதா என்று கும்பல் கூடி ஆராய்ந்தனர்.

இப்பதான் புதிசா வந்து இறங்கியது. தற்குள்ளாக ரிப்பேரா

எஸ்.ஐ அலுத்து கொண்டார். தொப்பைகான் ஒயர்லெஸ் கருவியை பார்த்து கொண்டிருந்தான். முன்னும் பின்னும் அதை பார்த்த அவனுக்கு உண்மை விளங்கிவிட்டது.
சந்தனத்தை குழைந்து தெளித்ததில் மொத்தமாக அதன் மைக்கில் அப்பி கொண்டதால் வந்த வினை என்று புரிந்து கொண்டான். அதை அகற்றியதும் ஒயர்லெஸ் தெளிவாக வேலை செய்தது.

புதியதாக சேர்ந்த  இரண்டு கான்ஸ்டபிள்கள் இருவரும் மஞ்சள் கிண்ணம், குங்கும கிண்ணம் ஏந்தி வர ஐய்யர் எல்லாவற்றிற்கும் மஞ்சளும் பொட்டும் வைத்தார். காலையிலிருந்து ஐய்யர் ஏட்டு கடும் உழைப்பு செய்தால் மாலையில் யாருக்கும் தெரியமால் கொஞ்சமாக தீர்த்தம் அருந்தினார். இன்ஸ்பெக்டர் உபயமான  அந்த உயர்ரகத் தீர்த்த மகிமையால் ஐய்யர் வாரி வாரி எல்லா இடங்களிலும் மஞ்சளைப் பூசி குங்கும பொட்டு வைத்தார்.
கம்யூட்டர் மானிட்ரில்  பெரியதாக மஞ்சள் தடலி குங்குமம் வைத்தார். குங்குமம் கீபோர்டு முழுக்க கொட்டியது.தைப் பார்த்த ரைட்டர் தலையில் தலையில் அடித்தது கொண்டார். 302 துப்பாக்கிகளுக்கும், பைனட்டுகளுக்கும் மஞ்சள் குங்குமம் பூமாலை அணிவிக்கப்பட்டது. பைனட்டில் ஐய்யர் அழுத்தி குங்குமம் வைக்க அது அவரது விரலை லோசக பதம் பார்த்தது. குங்குமம் மகிமையில் தீர்த்த போதையில் அது  பெரியதாகத் தெரியவில்லை.

எல்லாம் முடிந்து ஆயுத பூசைதொடங்கலாம் என்று பார்த்தால் இன்ஸ்பெக்டரைக் காணவில்லை. அலைபேசியில் தொடர்பு கொண்டதில் அவர் ஆயுத பூசைப் பார்ட்டியில் ஒன்றில் மகிழ்ந்து கொண்டு ருப்பது புரிந்தது. அவர் வருகைக்காக அனைத்து காவலர்களும் காத்திருந்தனர்.

இந்த ஆளுக்கு காலம் நேரம் தெரியா போயிட்டாதே

 அனைவரும் முணுமுணுத்து கொண்டிருந்தனர்.  இன்ஸ்பெக்டர் வந்து இறங்கினார். ஆயுத பூசையை ஆரம்பிக்ஆணையிட்டார்.

 ஐய்யர் ஏட்டு கற்பூரம் ஏற்றி சூடம் பழம் பூசணிக்காய் காட்டினார். பூசணிக்காயை நடுரோட்டில் போட்டு உடைத்தார்!
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பூசை செய்ய வந்தார். அதற்குள் ஐய்யர் ஏட்டு..

ஐய்யா...உங்க கைத் தூப்பாக்கியை காட்ட்டுங்க அதற்கு பொட்டு வைக்கனும்” என்றார்

பெல்டிலிருந்து இன்ஸ்பெக்டர் கைத்தூப்பாக்கியை எடுத்து ஐய்யரிடம் நீட்டினார். இரண்டுபேர் கைகளும் ஆயுத பூசை மகிமையில் லேசாக நடுங்கின.

ஐய்யர் ஏட்டு குங்குமத்தை ஸ்டிகரில் அழுத்தி வைக்க, அது பட் ..பட்….டென்று வெடித்தது. ஐய்யர் ஏட்டு மார்பில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியானார்.

ஆயுதபூசையில் தவறுதலாக கைப்பட்டு ஐய்யர் ஏட்டு மரணம்  

  மறுநாள் அனைத்து தினசரிகளில் செய்தி பிரசுரம் செய்.

ஐய்யர் ஏட்டு திட்டமிட்டு படுகொலை!
பெரியாரிஸ்டுகள் மாவோயிஸ்டுகள் சதிதிட்டம் அம்பலம்”

 சில தினசரிகள் இப்படியும் செய்தியை கக்கின.