Wednesday, May 17, 2017

Workers are not Beggars- தொழிலாளர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல

ஏன் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தை ஆதரிக்க வேண்டும்?
......................................................................
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 7000 கோடிகள் சம்பளம், பென்சன் கொடுக்காமல் 20 ஆண்டுகளாக தமிழக அரசு இழுத்தடித்து வருகின்றது. உழைப்பர் உழைப்பின் வியர்வை காயும் முன்பு அதற்க்கான கூலி வழங்க வேண்டும் என்கிறார்கள் நபிகள் உள்ளிட்ட பல பெரியோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Govt must be Model Employer (அரசாங்கம் என்பது முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டும்) என்கின்ற அறத்தை உச்சநீதி மன்றம் தொடர்ந்து தனது தீர்ப்புகளில் எடுத்து காட்டி உள்ளது. இதை ஜெயாவின் அதிமுக ஆட்சி கடைபிடிக்காமல் போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறது.
30 ஆண்டுகள் ஒயாது உழைத்த வயதான தொழிலாளிக்கு வழங்க வேண்டிய ரிட்டையர்மெட் பணம், மாதம் வழங்க வேண்டிய பென்சன் பணத்தை வழங்காமல் கோடிகணக்கில் நிலுவையாக வைத்துள்ளது. வயதான பல்லாயிரம் தொழிலாளிகள் பென்சன் இல்லாமல் எப்படி வாழ்வது? பென்சன் இல்லாமல் பலர் உயிரிழந்து உள்ளனர். உணவு இல்லாமல் நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.
செத்துப்போன போக்குவரத்து 5000 தொழிலாளி
மனைவிமார்கள், குழந்தைகளுக்கு
இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வில்லை..அவர்களிடம்.பிடித்த பணத்தை அரசு
LICக்கு இன்னும் கட்ட வில்லை. தமிழக அரசின் பச்சை துரோகம் செய்துள்ளது.
ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். பென்சன் வழங்காத அதிமுக ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அறத்தின் பால் உள்ள சமூகத்த்தின் முன் உள்ள அனைவரின் கடமை.
புதிய நியமனமின்மை ஆளுங்கட்சி ஊழியர் பணியிடம் திடீரென வேலைக்கு வரமுடியாதோர் பணியிடம் ஓவர் டைம் என்று பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பணிச்சுமை சொல்லிமாளாது.80முதல் 100பயணிகள் ஏறும்போது பேருந்தின் பயண வேகம் குறையும்.ஆந்த நேரத்தில் பயணிகள் பேசுகிற அவ்வளவு வசவுகளையும் பொறுத்துக் கொண்டு ஓட்டுநரும் நடத்துநரும் எதிர்கொள்ளும் மன உலைச்சல் கொஞ்ச நஞ்மில்லை
நூறு பயணிகள் இருக்கும்போது டிக்கெட்போட நடத்துநர் படும்பாடு அய்யய்யோ என்ன கொடுமை?

பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்கங்களுடன் நடத்தி வாக்குறுதிகளை அளிக்கும் ஜெயா-எடப்பாடி ஆட்சிகள் அதை மயிருக்கு கூட கடைபிடிக்கவில்லை. போக்குவரத்து அதிகாரிகள், அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் தொடர் ஊழல்களில் ஈடுபட்டு போக்குவரத்து துறையில் நட்டத்தில் இயக்க காரணமாக உள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்ததை அறிவித்தனர். பலசுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தினர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 7000 கோடிகள் சம்பளம், பென்சன் தராமல் மமதையும், திமிருடனும் எடபாடி ஆட்சி நடந்து கொண்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்ததை எளிதாக உடைத்து விடுவோம், ஆளும் கட்சி ஆதரவு தொழிற்சங்கங்கள், துரோக-கைக்கூலி எடுபிடி காங்கிரஸ்-பிஜேபி தொழிற்சங்கங்கள், தற்காலிக தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வேலைநிறுத்தமே நடைபெறாமல் செய்வதில் அதிகாரிகள், ஆட்சிகள் கொழுப்பெடுத்து அறிவித்து கொண்டிருக்கின்றனர். அதிகமாக ரயில்களை இயக்குவோம் என்று போராடு ம் தொழிலாளிக்கு எதிராக இன்னொரு தொழிலாளியை ஏவும் கயமையை ஆட்சியாளர்கள் செய்கின்றனர்.
தொடர்ச்சியாக இதை பார்த்த, உணர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தன்னிச்சையாக முன்கூட்டியே ஸ்டிரைக்கை ஆரம்பித்தனர். தங்கள் கூட்டு சக்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதில் சிறிது பாதுப்பு பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை.
இந்த போராட்டம் வெற்றி பெற செய்ய வைப்பது அனைத்து தமிழக மக்களின் தார்மீக கடமை.
போக்குவரத்து தொழிலாளி வேலைநிறுத்தம்  சுயநலன் சார்ந்து அல்ல என்பதை  நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
1-போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை (பி.எப்./எல் ஐ சி./ஆர் டி/கடன் சொசைட்டி)இப்படி எந்த பணமும் அந்தந்த நிறுவனங்களுக்கு பலவருடங்களாக நிர்வாகங்கள் செலுத்தவில்லை.
2-அரசு அறிவித்த சலுகைககள்(இலவச பயண அட்டைகள்.எம் எல் ஏ.எம் பி.மாற்றுத்திறனாளி.நோயாளிகள்)காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பு அரசு கழகங்களுக்கு வழங்கவில்லை.
3-பள்ளிகுழந்தைகளுக்கு அரசு அறிவித்த இலவசபஸ் பயணத்திற்கான செலவில் போக்குவரத்துகழகங்கள் ஏற்றுக்கொண்ட தொகைபோக மீதி தொகை வழங்கப்படவில்லை.
4-பணிஓய்வு பெற்று செல்லும் தொழிலாளர்ளுக்கு அவர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய கிராஜிவிட்டி(பணிக்கொடை)பிஎப்;விடுப்பு ஒப்படைப்பு சம்பளம்;மருத்துவ தொழிற்நுட்ப கல்லூரிகளுக்கு தொழிலாளி செலுத்திய பங்குதொகை எதுவும் வழங்காத நிலை.
5-தொழிலாளர்களுக்கு தொழிலாளர்நீதி மன்றம் வழங்கும் தீர்ப்புகள் காரணமாக கிடைக்கவேண்டிய நிலுவை தொகைகள்.
6-நிர்வாக தண்டனைகள் மற்றும் பே-அனாமலியால் ஏற்படும் பணபலன்கள்.
7-வருடாந்திர ஊதிய உயர்வு ;ஆய்வுபலன்(ரிவியூ)போன்றவற்றால் வரும் பணபயன் நிலுவைகள்.
8-இதற்கெல்லாம் மேலாக விலைவாசி உயர்வை தொழிலாளர்கள் தாங்கமுடியாத நிலையில் அதை ஓரளவாவவது
ஈடுசெய்யும் நோக்கில் வழங்கப்படும் பஞ்சப்படி(D.A )உட்பட பணபலன்கள் வழங்கப்படவில்லை.
9-மத்தியஅரசு பின்பற்றிவரும் நாசகர பொருளாதார கொள்கைககள் காரணமாக கட்டுபாடின்றி ஏறிவரும் டீசல் விலைஉயர்வை ஈடுகட்ட அரசு உதவி மறுக்கப்படுகிறது.
10-அரசு சேவைத்துறை நிறுவனமான போக்குவரத்து கழகம் சுங்கசாவடிக்கு (டோல்கேட்)கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது.
11-போக்குவரத்துக்கழக பேருந்துகள் காப்பீடு (இன்சூரன்ஸ்)செய்யப்படாததால் கோடிகணக்கான ரூபாய் விபத்து இழப்பீடு வழங்கும் நிலை.
12-அரசு விழாக்களுக்காக தேவையற்றவகையில் திட்டமிடல் ஏதுமின்றி ஒரேநேரத்தில் ஒரேகழகத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்குவதால் ஏற்படக்கூடிய தேவையற்ற செலவீனங்கள்.
.13-தகுதிசான்று(FC)என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகை.
14-அனுமதி இல்லாத ஆம்னி பேருந்து மற்றும் தடம்மாறி இயக்கும் மினிப்பேருந்துகளால் ஏற்படுத்தப்படும் இழப்பு.
15-எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வெருநாளும் வரவுக்கும் -செலவுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தால் ஏற்படும் 5-கோடி இழப்பு...
16. வெள்ளம் வந்த பொழுது இலவசமாக போருந்து இயக்க அதிமுக ஆட்சி செய்தது. அதற்க்கான கோடிக்கணக்கான பணத்தை இன்று வரை தரவில்லை
இன்னும் சொல்லமுடியும் இப்படி எதுகுறித்தும் கவலைபடாத அரசுகளால் ஏற்படுத்தப்படும் நஷ்டத்திற்கு இரவும் பகலும் பாராமல் உழைக்கும் தொழிலாளி எப்படி பொறுப்பாக முடியும்.
பணிஓய்வு பெற்றுசெல்லும் நிலையில் தொழிலாளிக்கு சேரவேண்டிய தொகைககளை முடக்கிவைத்து அதைகொண்டு கழக அன்றாட செலவுகளைசெய்வோம் எனசொல்லும் அரசுகளின் நடவடிக்கை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
பொறுமையாக பேசிப்பேசி பலகட்ட போராட்டங்களுக்கு பிறகே வேலைநிறுத்தம் ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு தொழிலாளி வந்துள்ளான்.
இப்போராட்டத்தை இருகரம் நீட்டி வரவேற்று வெற்றிபெறச்செய்வது என்பது நாம் பெற்ற சுதந்திரத்தை பேணிபாதுகாப்பதாகும்.
இது பொதுச்சொத்து மக்கள்சொத்து யாரும் இதை அளிக்கவிடோம்.
மக்கள் மத்தியில் அதிர்ப்த்தியை உருவாக்கி தனியார்மயத்திற்கு தூபம் போடும் அரசுகளின் நடவடிக்கையை தொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து முறியடிப்போம்.
இது சலுகைகேட்கும் போராட்டமல்ல தேசம் காக்கும் போராட்டமே.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு திடீர் ஸ்டிரைக் நி
யாமானது.
அனைவரும் அதை ஆதரிக்க வேண்டும்.
குறிப்பாக முகநூல் நண்பர்கள் இதனை தங்கள் கடமையாக நினைத்து எழுத வேண்டும்.
இந்த தொழிலாளர் போராட்டம் தோற்றால் மக்கள்விரோத ஆட்சியாளர்கள், எதிரிகள் கும்மாளமிடுவார்கள். ஊழல் கொள்ளைகளை துணிந்து செய்வார்கள்.
Workers are not Beggars-
தொழிலாளர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல.
ஸ்டிரைக்கை வாழ்த்துவோம். ஆதரிப்போம்..அணியமாவோம்@! .#TransportWorkersStrike #CITU#BusStrike